Tuesday, March 18, 2025
spot_img
Homeஉலக செய்திகள்'ரூ' என்பதை பெரிதாக்கியது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

‘ரூ’ என்பதை பெரிதாக்கியது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ‘ரூ’ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.

 

‘உங்களில் ஒருவன்’ (Ungalil Oruvan) என்னும் பெயரில் நேற்று (மார்ச் 16) வெளியான காணொலியில், இதுகுறித்து அவர் பேசியுள்ளார். அந்த வீடியோவில், “பட்ஜெட் logo-வை வெளியிட்டிருந்தேன். மொழிக்கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக அதில் ‘ரூ’-என்று வைத்திருந்தோம். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள். அதை பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள்.

 

ஒன்றிய அரசிடம், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், பேரிடர் நிதி வழங்க வேண்டும், பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க வேண்டும், தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்களை வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர், இதைப் பற்றி பேசியிருக்கிறார்.

 

அவங்களே, பல பதிவுகளில் ரூ-என்றுதான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்திலும் எல்லாரும் Rupees- என்பதை எளிமையாக Rs-என்றுதான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாக தெரியாதவங்களுக்கு, இதுதான் பிரச்சினையாக தெரிகிறது போல. மொத்தத்தில், இந்திய அளவில் நம் பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்! இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.” என த இந்து செய்தி கூறுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments