வவுனியா புதிய பஸ் நிலையத்தில், எங்குமில்லாதவாறு, அதிசயக்கத் தக்க கதிரைகளை காணமுடிவதாக பொது மக்கள் விசனம்!
விசயம் அறிந்து விரைந்தோடிச் சென்று பார்த்தோம்..!உண்மையில், இலங்கையின் எப்பாகத்திலும் இது போன்ற கதிரைகளை, நாம் இதுவரை பார்த்ததில்லை..!இக்கதிரைகள் வளர் பிறை காலத்தில் வளர்வதாகவும், தேய்பிறை காலங்களில் தேய்வதாகவும் சொல்கிறார்கள்.
.சிலர் சொல்கிறார்கள், மாதத்திற்கு ” ஒரு இஞ்ச்” அளவு வளர்ந்து கொண்டு வருவதாக கூறுகின்றனர்..!
இல்லை இல்லை… இது முற்றிலும் பொய்.. இது மாதம் தோறும் தேய்ந்து கொண்டு… செல்வதாக, சிலர் சொல்கிறார்கள்..!
எது உண்மையென்று…? புரியாத குழப்பத்தில், மக்கள் உள்ளனர் என்று, சிலர் சொல்கிறார்கள்..!
சிலர் சொல்கிறார்கள், இக் கதிரைகளில் அமர்ந்தால், தீராத நோய்களெல்லாம் குணமாகும்” என்று சொல்கிறார்கள்..!
இதில் எது உண்மை என்று புரியாத குழப்பத்தில் பலர் தலையை போட்டு பிய்த்துக் கொள்கிறார்களாம்..!
உரிய கதிரைகளை ஆய்வுக்கு உட்படுத்தினால் தான், உண்மை புலனாகும் என்று, விசயமறிந்த வட்டாரங்கள் முணுமுணுக்கின்றனர்..!
பொறுத்திருந்து பார்த்தால் தான் எது உண்மை என்று புலனாகும்.
வவுனியா சமூக ஆர்வலர் பிராதாபன்