நாடளாவிய ரீதியில் அரச வைத்திய சங்க அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச மருத்து அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.
இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல மயில் தூரத்தில் இருந்துதனியார் பேருந்துகளில்வருகை தந்தம்நோயாளர்கள் பெரும் பண நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.