வடக்கு கிழக்கில் ஈ.பி.டி.பி #வீணைச் சின்னத்தில் தனித்திப் போட்டி ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் தெரிவிப்பு –
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வடக்கு,கிழக்கில் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் தனித்திப் போட்டி போட்டியிடவுள்ளதாக ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –
ஈ.பிடி.பி தனது தனித்துவத்துடனேயே அனைத்து தேர்தல்களிலும் முகங்கொண்டு கூறிவருகின்றது.
குறிப்பாக வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் உள்ளடங்கலாக வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளது.
அதனடிப்படையில் எதிர் வரும் தேர்தலில் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன்“ என
கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.