பூக்களை கை கொண்டு கசக்குவது எமக்கு மிக கடினமாக இருக்கும் ஆனாலும் கொலைகாரக் கொடுகூரர்கள் இரு பச்சிளம் பாலகன்களையும் தாய், தந்தையையும் கொலை செய்வதற்கு எப்படி மனம் வந்தது வருடங்கள் இரண்டு ஓடியும் எந்தவித நீதியும் இல்லை இதுவரை யாரையும் கைது செய்யவும் இல்லை சட்டம் ஒரு இருட்டறை அது எமது பகுதிக்கு பொருந்துகிறது எவரிடம் பணம் இருக்கிறதோ அவர் நினைத்ததை சாதிக்கிறார் பணமில்லாதவர்கள் எங்கு சென்றாலும் சோதனை தான் கடந்த கால அரசாங்கத்திலே மாபியாக்களுக்கு முதலிடம் கொடுத்து வந்தார்கள் அதனால் தான் இது போன்ற கொடுக்குறங்கள் நடந்தேறி வந்தன மூடி மறைக்கப்பட்ட இந்த குடும்பத்தின் மறைவு எமக்கு ஒரு பேரிழப்பு வவுனியாவில் இருக்கின்ற அனைத்து ஊடகங்களும் அறிந்த விடயமே ஏன் யாரும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி மேலதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை அப்போது அந்த பண முதலைகளுக்கு நீங்களும் அடிமையா அல்லது பயமா இப்போதுதான் புதிய அரசாங்கம் இருக்கிறது இனியாவது இந்த குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா இதுவும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது
2023 ஆம் ஆண்டு மார்ச் மாசம் ஏழாம் தேதி நள்ளிரவில் நடந்தேறிய சோகம்
RELATED ARTICLES